புதுச்சேரியில் மார்ச் 1 முதல் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை…

14 வகையான பிளாஸ்டிக் பொருட்களுக்கு, புதுச்சேரியில் மார்ச் ஒன்றாம் தேதி முதல் தடை விதிக்கப்படுவதாக முதலமைச்சர் நாராயணசாமி அறிவித்துள்ளார்.

புதுச்சேரியில், இந்த ஆண்டின் முதல் அமைச்சரவை கூட்டம் முதலமைச்சர் நாராயணசாமி தலைமையில் சட்டப்பேரவை அலுவலகத்தில் இன்று நடைபெற்றது.

சுமார் 4 மணி நேரம் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த நாராயணசாமி,

புதுச்சேரியில் வரும் மார்ச் ஒன்றாம் தேதி முதல் ஒருமுறை மட்டுமே பயன்படுத்தி தூக்கி எறியப்படும் 14 வகையான பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிப்பென முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறினார்.