புதுச்சேரியில் மே 3ம் தேதிக்கு பிறகும் ஊரடங்கை நீட்டிக்க சுகாதாரத்துறை பரிந்துரை..

புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் மே 3ம் தேதிக்கு பிறகும் பொதுமுடக்கத்தை நீட்டிக்க புதுச்சேரி அரசிடம் பரிந்துரை செய்துள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

மேலும் இது குறித்து முதல்வர், அமைச்சர்கள் இறுதி முடிவு எடுப்பார்கள் எனவும் புதுச்சேரி சுகாதார இயக்குநர் மோகன்குமார் விளக்கம் அளித்துள்ளார்.