புதுக்கோட்டை மீனவர்கள் மேலும் 4 பேர் சிறைபிடிப்பு : இலங்கை கடற்படை மீண்டும் அட்டூழியம்…

புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாப்பட்டினம் துறைமுகத்தில் இருந்து, திருப்புனவாசலைச் சேர்ந்த 4 மீனவர்கள் நேற்று முன்தினம் மீன்பிடிக்கச் சென்றனர்.

படகு சேதமடைந்த நிலையில் நடுக்கடலில் தவித்த அவர்களை இலங்கை கடற்படையினர் காங்கேசன்துறை முகாமிற்கு கொண்டுசென்றனர்.

இந்நிலையில், கோட்டைப் பட்டினத்தில் இருந்து நேற்று காலை மீன் பிடிக்க சென்ற 4 மீனவர்கள் நெடுந்தீவு அருகே இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டனர்.

பின்னர் காரைநகர் கடற்படை முகாமிற்கு கொண்டு சென்று நடத்தினர். அவர்களை வரும் 10 ந் தேதிவரை சிறையில் அடைக்க ஊர்க்காவல்துறை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அடுத்தடுத்த நாட்களில் 8 மீனவர்கள் சிறைபிடிக்கப்பட்டது புதுக்கோட்டை பகுதி மீனவ கிராமங்களில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.