புதுக்கோட்டை அருகே கஜா புயலால் பாதிக்கப்பட்ட கிராம மக்கள் மறியல் போராட்டம் ….

கஜா புயலின் போது ஏற்பட்ட அதிவேக சூறாவளிக் காற்றால் லட்சக்கணக்கான மரங்கள், மின்கம்பங்கள் சாய்ந்தன.

ஆயிரத்திற்கும் மேல் மின் டிரான்ஸ்பார்மர்கள் மாவட்டத்தில் சேதமாகின.

இதனால் குடிநீர், போக்குவரத்து, மின் சப்ளை பாதிக்கப்பட்டு உள்ளது. பல கிராமங்களில் மக்கள் மறியலில் ஈடுபட்டனர்.

கொத்தமங்கலத்தில் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் கணக்கெடுப்பு நடத்தவில்லை என மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

வருவாய் மற்றும் உள்ளாட்சித்துறை அதிகாரிகள் சமரசம் பேச சென்றபோது சிறை பிடிக்கப்பட்டனர்.

வருவாய் மற்றும் போலீஸ் வாகனங்கள் மீது கல்வீச்சு நடந்ததில், போலீஸ்காரர் காயம் அடைந்தார். பின் போலீஸ் வாகனங்கள் உட்பட ஐந்து வாகனங்களுக்கு தீ வைப்பு சம்பவமும் நடந்தது.