புதுவை முதல்வர் நாராயணசாமி வீட்டுக்கு வெடிகுண்டு வைத்ததாக மர்மநபர்கள் மிரட்டல் விடுத்துள்ளனர். காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு மர்ம நபர் தொலைபேசியில் மூலம் மிரட்டல் விடுத்தார். மிரட்டலை அடுத்து எல்லையம்மன் கோயில் வீதியில் உள்ள நாராயணசாமி வீட்டில் சோதனை நடைபெற்று வருகிறது. மோப்ப நாய்கள் உடன் நடத்திய சோதனையில் வெடிகுண்டு மிரட்டல் புரளி என தெரிவந்துள்ளது
