புதுச்சேரி காலாப்பட்டில் போலீஸ் துப்பாக்கிச்சூடு, கண்ணீர் புகை குண்டு வீச்சு


புதுச்சேரி காலாப்பட்டு மருந்து ஆலை விரிவாக்கத்திற்கு கிராம மக்கள் கடும் எதிரிப்பு தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக கருத்து கேட்பு கூட்டம் நடைபெற்றது. அப்போது இரு பிரிவினரிடையே கடும் மோதல் ஏற்பட்டது. இதனையடுத்து போலீஸார் துப்பாக்கிச்சூடு மற்றும் கண்ணீர் புகைகுண்டு வீசி தாக்குதல் நடத்தியதால் பதற்றம் ஏற்பட்டுள்ளது.