சொத்து குவிப்பு வழக்கு : புதுவை தட்டாஞ்சாவடி தொகுதி எம்எல்ஏ அசோக் ஆனந்த் தகுதி நீக்கம்.

சொத்து குவிப்பு வழக்கில் ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் ஒர் ஆண்டு தண்டனை பெற்ற புதுச்சேரி எம்எல்ஏ அசோக் ஆனந்த்தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.

இவர் புதுச்சேரி தட்டாஞ்சாவடி தொகுதியில் இருந்து என்ஆர் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர். இந்த தொகுதிக்கு விரைவில் இடை தேர்தல் நடைபெறும்.