புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த 2 ராணுவ வீரர்களின் உடலுக்கு திருச்சி விமான நிலையத்தில் அஞ்சலி…

புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த 2 ராணுவ வீரர்களின் உடல்கள் திருச்சி வந்தன. திருச்சி விமான நிலையத்தில் பாதுகாப்பு துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் அஞ்சலி செலுத்தினார்.

அவரைத் தொடர்ந்து தமிழக அமைச்சர்கள் வெல்லமண்டி நடராஜன்,வளர்மதி இருவரும் அஞ்சலி செலுத்தினர்.

குடும்ப உறுப்பினர்கள் உட்படஏராளமான பொதுமக்கள் அஞ்சலி செலுத்த கூடியிருக்கின்றனர்.

முன்னதாக புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த 2 ராணுவ வீரர்களின் உடல்கள் திருச்சி வந்தன. புல்வாமா தாக்குதலில் பலியான கோவில்பட்டியை சேர்ந்த சுப்ரமணியன், அரியலூரை சேர்ந்த சிவச்சந்திரன் உடல்கள் திருச்சி வந்தடைந்தன.

தமிழக வீரர்களுடன் கர்நாடகம், கேரளாவை சேர்ந்த வீரர்கள் உடல்களும் திருச்சி வந்தன. ராணுவ வீரர் உடல்களை சொந்த ஊர்களுக்கு அனுப்ப சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.