பங்குனி உத்திரம் : முருகன் கோவில்களில் சிறப்பு வழிபாடு..

இன்று பங்குனி உத்திரத் திருநாள் தமிழமெங்கும் உள்ள முருகன் கோவில்களில் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. பழனி,திருச்செந்துார் போன்ற அறுபடை வீடுகளில் தேர் திருவிழா நடைபெற்று வருகிறது. பக்தர்கள் வகாவி,பால்குடம்,அலகுத்துதல்,தீ இறங்குதல் மூலம் தங்கள் நேர்த்திக்கடனை செலுத்தி வருகின்றனர்.

தமிழர்கள் அதிகம் வாழும் இலங்கை,மலேசியா,சிங்கப்பூர் நாடுகளில் பங்குனி உத்திரத் திருவிழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.