பாம்புகளை கையில் பயமின்றிப் பிடித்துப் பார்த்த பிரியங்கா…: வாக்குச் சேகரிப்பின் போது சுவாரஸ்யம்

உத்தரப்பிரதேசத்தின் ரேபரேலி தொகுதியில் பாம்பாட்டிகளை சந்தித்து பிரியங்கா காந்தி வாக்கு சேகரித்தார்.

அப்போது அவர் பாம்புகளை தனது கையில் அனாயசமாக பிடித்து பார்த்தார். அத்துடன் பாம்பாட்டிகளின் வாழ்க்கை முறை, அவர்கள் சந்திக்கும் பிரச்சினைகள் மற்றும் கோரிக்கைகளை கேட்டு அறிந்து கொண்டார்.