பூடான் பிரதமருடன் ராகுல் காந்தி சந்திப்பு..

பூடான் பிரதமர் லாட்டே ஷெரிங், முதல் வெளிநாட்டு பயணமாக கடந்த 27–ந்தேதி டெல்லி வந்தார்.

3 நாள் அரசுமுறை பயணமாக வந்திருந்த அவர், பிரதமர் மோடி உள்ளிட்ட பல்வேறு தலைவர்களை சந்தித்து பேசினார்.

டெல்லியில் தங்கியிருந்த அவரை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி சந்தித்தார்.

ஓட்டல் ஒன்றில் நடந்த இந்த சந்திப்பு நிகழ்ச்சியின் போது, இரு தலைவர்களும் பிராந்திய அரசில் நிலவரம் குறித்து பேசினர்.

இந்த சந்திப்பு குறித்து ராகுல் காந்தி பின்னர் தனது டுவிட்டர் தளத்தில் கூறுகையில்,

‘பூடான் பிரதமர் லாட்டே ஷெரிங்குடன் இன்று மிகச்சிறப்பான சந்திப்பு ஒன்றை நிகழ்த்தினேன்.

பிராந்திய அரசியல் நிலவரம் மற்றும் இருநாட்டு பொது நலன்கள் குறித்து இருவரும் விவாதித்தோம்.

எங்கள் பேச்சுவார்த்தை எதிர்காலத்திலும் தொடர வேண்டும் என விரும்புகிறேன்’ என்று குறிப்பிட்டு இருந்தார்.

கடந்த 27 ம் தேதி டெல்லி வந்த பூடான் பிரதமர், நேற்று 28-ம் தேதி பிரதமர் மோடியை சந்தித்து பேசியது குறிப்பிடத்தக்கது.
I had an excellent meeting today with the Prime Minister of Bhutan, Dr Lotay Tshering. We discussed the political situation in the region and other matters of common interest. I look forward to continuing our dialogue in the future. pic.twitter.com/QwbTddNaGc

— Rahul Gandhi (@RahulGandhi) December 29, 2018