தமிழகம், புதுவையில் நாளைவரை கனமழை தொடரும்

தமிழகம், புதுச்சேரியின் பல்வேறு பகுதிகளிலும் நாளைவரை கனமழை தொடரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஞாயிற்றுக் கிழமை சற்று ஓய்ந்திருந்த மழை, இரவு மற்றும் காலை முதல் மீண்டும் தொடங்கி உள்ளது. இதில் திருவாரூர், நாகை மாவட்டங்களில் அறுவடைக்கு தயாராக இருந்த சம்பா பயிர்கள் நீரில் மூழ்கியதால் விவசாயிகள் வேதனைக்கு ஆளாகி உள்ளனர்.

rain continues up to tomorrow