தாழ்வான பகுதிகளில் தேங்கிய நீர் உடனடியாக வெளியேற்றம்: முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி….

சென்னையில் மழை நீரால் ஏற்பட்ட பாதிப்புகளை ஆய்வு செய்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் சென்னையில் கனமழை காரணமாக தாழ்வான பகுதிகளில் தேங்கிய நீரை, மாநகராட்சி அதிகாரிகள் துரிதமாக செயல்பட்டு அகற்றினர். ஏரிகளில் தூர்வாரியதால், கூடுதலாக 30 சதவிகித நீர் சேமிக்கப்பட்டுள்ளது