ராஜபக்சேவுக்கு எதிரான நம்பிக்கை இல்லா தீர்மானத்திற்கு ஆதரவு : தமிழ் தேசிய கூட்டமைப்பு முடிவு..

ராஜபக்சேவிற்கு எதிரான நம்பிக்கை இல்லா தீர்மானத்திற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு ஆதரவு தெரிவிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ராஜபக்சே அரசிற்கு எதிராக கொண்டு வரப்படும் நம்பிக்கை இல்லா தீர்மானத்திற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு ஆதரவு தெரிவிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் ஆட்சியில் இருந்த கட்சியில் திடீரென பிளவு ஏற்பட்டதால், இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேனா, பிரதமர் பதவியில் இருந்த ரணில் விக்கிரமசிங்கேவை பதவியில் இருந்து நீக்கிவிட்டு, எதிர்க்கட்சியாக இருந்த மஹிந்த ராஜபக்சே பதவியில் அமர்த்தப்பட்டார்.

இதற்கு பல்வேறு தமிழ் அமைப்புகளும் கண்டனம் தெரிவித்த நிலையில், இலங்கை பாராளுமன்றத்தில் ராஜபக்சே தனது பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டிய சூழல் உண்டாகி உள்ளது.

இந்நிலையில், தமிழ் தேசிய கூட்டமைப்பைச் சேர்ந்த எம்பி வியாழேந்திரன் என்பவர், பதவிக்கு ஆசைப்பட்டு, ராஜபக்சே கட்சிக்கு தாவினார். அவருக்கு ராஜபக்சே அமைச்சரவையில் துணை அமைச்சர் பதவி வழங்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து, தமிழ் தேசிய கூட்டமைப்பு புதிய அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், ராஜபக்சே அரசிற்கு எதிராக கொண்டு வரப்படும் நம்பிக்கை இல்லா தீர்மானத்திற்கு ஆதரவாக தமிழ் தேசிய கூட்டமைப்பு இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், பெரும்பான்மை இல்லாத ஒருவரை பிரதமராக அறிவித்ததோடு, நம்பிக்கை இல தீர்மானத்தை விரைந்து நடத்தாமல், கால தாமதப்படுவத்து ஜனநாயக விரோத செயல் எனவும் தமிழ் தேசிய கூட்டமைப்பு தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

தமிழ் தேசிய கூட்டமைப்பில் இருந்த எம்பி வியாழேந்திரன் கட்சி மாறியதற்கு கண்டனம் தெரிவித்த அந்தக் கட்சி அவர் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது.

பாராளுமன்றத்தில் நம்பிக்கை இல்லா தீர்மானத்திற்கு ஆதரவாக தமிழ் தேசிய கூட்டமைப்பு வாக்களிக்கும் பட்சத்தில், ராஜபக்சே பிரதமர் பதவியை இழக்க வாய்ப்புள்ளதாக அங்குள்ள அரசியல் பிரமுகர்கள் தெரிவிக்கின்றனர்.