இராஜபாளையத்தில் சர்வதேச அளவிலான சதுரங்க போட்டிகள் : வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கி கௌரவம்..

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையத்தில் ராம்கோ குழுமம் நடத்தும் சர்வதேச அளவிலான பைடு ரேட் சதுரங்க போட்டிகள் 29.11.2018 அன்று காலை 11.30 அளிவில் தொடங்கிய போட்டிகள் இன்று டிசம்பர் 2-ந்தேதி வரை நடைபெற்றது.

போட்டியில் 300 சதுரங்க வீரர்கள் பங்கேற்றனர்.இதில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

பரிசுகளை விருதுநகர் மாவட்ட சதுரங்க சங்க தலைவரும், இராஜபாளையம் சதுரங்க சங்க தலைவருமான திரு. கோபால் சாமி அவர்கள் வழங்கி சிறப்பித்தார்கள்.

3 நாட்கள் நடைபெற்ற இப்போட்டியை நுாற்றுக்கணக்கான மாணவர்களும், பொதுமக்களும் கண்டுகளித்தனர்.

முன்னதாக டிச.,29 அன்று ராம்கோ பொறியியல் கல்லுாரி வளாகத்தில் நடைபெற்ற இந்தப் போட்டிகளைபோட்டியை மாநில சதுரங்க கழக செயலாளர் திரு.ஸ்டீபன் பால்ராஜ் தொடங்கி வைத்தார்.

போட்டி ஏற்பாடுகள் ராம்கோ குழும சேர்மனும்,ராம்கோ பொறியியல் கல்லுாரி தாளாளருமான திரு. பி.ஆர்.வெங்கட்ராம் ராஜா அவர்களின் வழிகாட்டுதலின்படி

ராம்கோ பொறியியல் கல்லுாரி உடற்கல்வித்துறை இயக்குனர் திரு வீரமணி அவர்கள் தலைமையில் கல்லுாரி நிர்வாகத்தினர் சிறப்பாக செய்து வருகின்றனர்.

இந்த சதுரங்க போட்டியில் முதல் பரிசு ரூ.70,000.. வழங்கப்பட்டது.

ரூ.5,00,000 வரையிலான பரிசுகள் வழங்கப்பட்டன.

சதுரங்கப் போட்டியை சிறப்பாக நடத்திய ராம்கோ குழும சேர்மன் மற்றும் ராம்கோ பொறியியல் கல்லுாரி நிர்வாகத்திற்கும்,

போட்டியில் பங்கேற்ற வீரர்களுக்கும், அவர்களை ஊக்கப்படுத்திய மாணவர்கள் பெற்றோருக்கும்,ஊடக நண்பர்களுக்கும் ராஜபாளையம் சதுரங்க கழகம் சார்பில் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம்

மெ.மெய்யப்பன்,
இராஜபாளையம்