ராஜீவ் கொலை வழக்கில் சிறையில் உள்ள ரவிச்சந்திரனுக்கு 2 வாரம் பரோல்..


மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் கொலை வழக்கில் தண்டனை பெற்ற ரவிச்சந்திரன் மதுரை சிறையில் இருந்துவந்தார். தாயை கவனிப்பதற்காக 1 மாதம் பரோல் கேட்டு சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுத் தாக்கல் செய்தார். வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரைக் கிளை 2 வாரம் பரோல் வழங்கி உத்தரவிட்டது.