ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் டெல்லி வருகை : பிரதமர் மோடி வரவேற்பு..

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் டெல்லி வருகை புரிந்தார். அவரை பிரதமர் மோடி கட்டித் தழுவி வரவேற்றார்.
இந்தியாவுக்கு வரும் ரஷ்ய அதிபர் பல ஆயிரம் கோடி மதிப்பிலான ஒப்பந்தத்தில் கையெழுத்தாக உள்ளது.

இந்தியா – ரஷ்யா நாடுகளுக்கிடையே நட்புறவு மேம்படுத்தும் வகையில், ஆண்டுதோறும் இரு நாடுகளுக்கிடையே மாநாடு நடைப்பெறும். கடந்தாண்டு மே மாதத்தில் புனித பீட்டஸ்பர்க் நகரில் இந்த மாநாடு நடந்தது. அப்போது இந்திய பிரதமர் மோடி ரஷ்யாவுக்கு சென்று விளாடிமிர் புடினை சந்தித்து பேசினார்.

இந்தாண்டு இந்தியாவில் 19வது மாநாடு நடைப்பெறுகிறது. இன்று டெல்லிக்கு வரும் ரஷ்ய பிரதமர் புடின் இருநாடுகளுக்கிடையே பல்வேறு ஒப்பந்தங்கள் கையெழுத்தாக உள்ளன.

அதில் 40 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான எஸ்-400 ஏவுகணைகளை வாங்கும் ஒப்பந்தம் கையெழுத்தாக உள்ளது.
ரஷ்யாவுடன் பல ஆயிரம் கோடி மதிப்பிலான ஒப்பந்தத்தில் இந்தியா இன்று கையெழுத்தாகிறது.

ரஷ்யாவுடன் பல ஆயிரம் கோடி மதிப்பிலான ஒப்பந்தத்தில் இந்தியா இன்று கையெழுத்தாகிறது.

2007ம் ஆண்டு முதல் பயன்படுத்தப்பட்டு வரும் எஸ்-400 எவுகணைகள், 400 கி.மீ தொலைவில் உள்ள 300 இலக்குகளை கண்டு, ஒரே நேரத்தில் 36 இடங்களில் தாக்குதல் நடத்தும் திறன் கொண்டது.

ரஷ்யா – அமெரிக்கா இடையே பனிப்போர் பல காலமாக நடந்து வருவதால், ரஷ்யாவுடனான இந்தியா மேற்கொள்ளும் இந்த ஒப்பந்தம் அமெரிக்காவை அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.