சபரிமலை கோயில் வெள்ள பாதிப்பிற்கு மீண்டும் திறப்பு..

அண்மையில் கேரளாவில் ஏற்பட்ட வரலாறு காணாத வெள்ள பாதிப்பைத் தொடர்ந்து, சபரிமலை ஐய்யப்பன் கோயில் மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.

கேரள மாநிலத்தில் ஏற்பட்ட மழை வெள்ளம் காரணமாக கடந்த 3 வாரங்களுக்கும் மேலாக மூடப்பட்டிருந்த சபரிமலை ஐய்யப்பன் கோவில், பக்தர்களுக்காக நேற்று திறக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் சபரிமலையில் சுவாமி தரிசனம் செய்தனர்.

பம்பா நதியில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கால் 5 கிலோ மீட்டர் தூரம் துண்டிக்கப்பட்ட நிலையில், தற்போது அங்கு படிப்படியாக இயல்பு நிலை திரும்பி வருகிறது.