சபரிமலைக்கு பிளாஸ்டிக் எடுத்துச் செல்ல தடை..


சபரிமலைக்குச் செல்லும் பக்தர்கள் பிளாஸ்டிக் எடுத்துச் செல்ல கேரள உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

கேரளாவில் உள்ள புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு இந்தியா முழுவதும் இருந்து பக்தர்கள் வந்து வழிபடுகின்றனர்.

இங்கு வருபவர்கள் விட்டுச்செல்லும் பிளாஸ்டிக் கழிவுகளால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுகிறது.

இந்நிலையில், சபரிமலையில் பிளாஸ்டிக் பொருட்கள் தடை செய்யப்பட வேண்டி பொதுநல வழக்கு கேரள உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்டது.

இதில், இன்று தீர்ப்பளித்த நீதிமன்றம், சபரிமலைக்கு பக்தர்கள் பிளாஸ்டிக் பொருட்களை எடுத்துவர தடை விதித்தது.

பக்தர்கள் இரு முடியில் பிளாஸ்டிக் பைகள், டப்பா உள்ளிட்டவற்றை கொண்டுவர கூடாது என்றும் தண்ணீர் பாட்டில்கள் உட்பட எந்த பிளாஸ்டிக் பொருளும் விற்கவும் பயன்படுத்தவும் அனுமதி கிடையாது என்றும் கூறியுள்ளது.