சபரிமலையில் பெண்கள் : பாதுகாப்பு பணிக்கு 500 பெண் போலீசாரை நியமிக்க திட்டம்..

சபரிமலையில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கலாம் என்ற உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்ததை அடுத்து சபரிமலை பாதுகாப்பு பணிக்கு 500 பெண் போலீசாரை நியமிக்க திட்டமிட்டுள்ளனர்.

சபரிமலை வரும் பெண் பக்தர்கள் பாதுகாப்புக்காக அதிக அளவு பெண் போலீசாரை பம்பை, சன்னிதானத்தில் ஈடுபடுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பாக டி.ஜி.பி. லோக்நாத் பெக்ரா தலைமையில் போலீஸ் அதிகாரிகள் ஆலோசனை கூட்டமும் நடத்தப்பட்டது.

போலீஸ் நிலையம் வாரியாக பெண் போலீசை தேர்வு செய்து சபரிமலை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்த இந்த கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது.