முடிதிருத்துவோர் அனைவருக்கும் தலா ரூ.2000 வழங்கப்படும் : தமிழக அரசு அறிவிப்பு..

பொது முடக்கத்தால் தமிழகத்தில் முடிதிருத்தும் நிலையங்கள் தொடர்ந்து 53 நாட்களாக மூடப்பட்டு உள்ளது.

தமிழக அரசு பொதுமுடக்கத்தில் சில தளர்வுகளை அறிவித்திருந்தும் முடிதிருத்தும் நிலையங்களை திறக்க அனுமதிக்கவில்லை.

இதனால் முடிதிருத்துவோரின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டள்ளது.

இந்நிலையில் முடி திருத்வோருக்கு நிவாரணமாக தலா ரூ.2000 வழங்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

நலவாரிய உறுப்பினர்களுக்கும், நலவாரிய உறுப்பினர் அல்லாதோருக்கும் இந்த நிவாரணம் அளிக்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.