சாத்தான் குளம் போலீஸ் விசாரணையில் உயிரிழந்த தந்தை-மகன் குடும்பத்திற்கு ராகுல்காந்தி ஆறுதல்..

துாத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி கிளைச்சிறையில் போலீஸ் விசாரணையில் உயிரிழந்த சாத்தான் குளத்தை சேர்ந்த தந்தை-மகள் குடும்பத்திற்கு ராகுல்காந்தி ஆறுதல் கூறியுள்ளார்.

தனது டிவிட் பக்கத்தில்

போலீஸ் மிருகத்தனம் ஒரு கொடூரமான குற்றம். நம் பாதுகாவலர்களே அடக்குமுறை யாளர்களாக மாறுவது ஒரு பெரும் சோகம். பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்திற்கு எனது இரங்கலை தெரிவித்து கொள்வதோடு, ஜெயராஜ் & ஃபெனிக்ஸ் மரணத்திற்கு நீதி கிடைக்க அரசாங்கத்திடன் கோருகிறேன் என்று தெரிவித்துள்ளார்.