பள்ளி, கல்லூரிகளை டிசம்பர் வரை திறக்க வாய்ப்பில்லை: மத்திய உயர்கல்வி செயலர் தகவல்..

பள்ளி, கல்லூரிகளை டிசம்பர் வரை திறக்க வாய்ப்பில்லை என மத்திய உயர்கல்வி செயலர் தகவல் தெரிவித்துள்ளார்.

டெல்லியில் நடைபெற்ற மனிதவள மேம்பாட்டிற்கான நாடாளுமன்ற நிலைக்குழு கூட்டத்தில் முடிவு செய்திருப்பதான தகவல்கள் வெளியாகியுள்ளது.

கல்லூரி இறுதித் தேர்வுகள் திட்டமிட்டபடி இந்தாண்டு இறுதிக்குள் நடத்தப்படும் என்று அமித் காரே அறிவித்துள்ளார்.