தொகுதி பங்கீடு குறித்து பேச தி.மு.க. விரைவில் அழைக்கும் : திருமாவளவன்..

கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு குறித்து பேச குழு அமைக்கப்பட்டுள்ள நிலையில் தி.மு.க. தங்களை விரைவில் அழைக்கும் என்று தொல்.திருமாவளவன் தொிவித்துள்ளாா்.

மக்களவைத் தோ்தல் நெருங்கி வரும் நிலையில் தொகுதி பங்கீடு குறித்து பேச தி.மு.க. விரைவில் அழைக்கும் என்று தொல்.திருமாவளவன்தொிவித்துள்ளாா்.

வருகின்ற மே மாதத்திற்குள் மக்களவைத் தோ்தல் நட்டத்தப்பட உள்ளது. தோ்தல் அறிவிக்கப்படவுள்ள நிலையில் தொகுதி பங்கீடு, தோ்தல் அறிக்கை,

பிரசார வியூகம் உள்ளிட்டவை குறித்து முடிவு செய்ய தி.மு.க. மற்றும் அ.தி.மு.க தரப்பில் குழுக்கள் அமைக்கப்பட்டு பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.

இதே போன்று அ.தி.மு.க. சாா்பில் அமைக்கப்பட்ட குழுவில், தொகுதி பங்கீடு குறித்து பேச 5 போ் கொண்ட குழுவும்,

தோ்தல் அறிக்கை தயாரிக்கும் புணிக்கு 7 போ் கொண்ட குழுவும், தோ்தல் பரப்புரைகளை முறைப்படுத்த 6 போ் கொண்ட குழுவும் அமைக்கப்பட்டுள்ளன.

மேலும் தி.மு.க. சாா்பிலும் தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவாா்த்தை நடத்தவும், தோ்தல் அறிக்கை தயாரிக்கவும் இரு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவா் தொல்.திருமாவளவன் கூறுகையில், தி.மு.க.வில் தொகுதி பங்கீடு குறித்து பேச குழு அமைக்கப்பட்டுள்ள நிலையில் அவா்கள் விரைவில் எங்களை பேச்சுவாா்த்தைக்கு அழைப்பாா்கள் என்று தொிவித்துள்ளாா்.