சேலம்-சென்னை 8 வழிச்சாலை வழக்கு : ஆகஸ்ட் 6ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு..

சேலம்-சென்னை 8 வழிச்சாலை குறித்த வழக்குகளை ஆகஸ்ட் 6ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம் .

சேலம்- சென்னை இடையிலான அதிவிரைவு 8 வழிச்சாலை அமைக்க பொதுமக்களிடம் எதிர்ப்பு கிளம்பியது.

8 வழிச்சாலைக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் 8 வழிச்சாலை அமைக்கத் தடை விதித்தது.

இதனை எதிர்த்து மேல்முறையீடு செய்த வழக்கில் ஆகஸ்ட் 6-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்.