சுயஉதவி குழுக்களுக்கு அதிகளவில் கடன் உதவி : முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பெருமிதம்..

தமிழக அரசு சுயஉதவி குழுக்களுக்கு அதிகளவில் கடன் உதவுகளை வழங்கி சாதனை படைத்து வருகிறது என்று முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

சேலத்தில் 325 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டு வரும் இரட்டை அடுக்கு மேம்பால பணிகள் விரைவில் முடிக்கப்பட உள்ளது என்று தெரிவித்த முதல்வர்,

அரசின் திட்டங்களின் பயன்கள் அனைத்து தரப்பு மக்களவையும் சென்றடைகிறது என்றும் அரசின் திட்டங்களால் பயனடைந்தவர்கள் உரிய முறையில் நன்றியை தெரிவிப்பார்கள் என நம்புவதாக முதல்வர் கூறினார்.

சேலத்தில் பல்வேறு துறைகள் சார்பில் ரூ.64.73 கோடியில் 35 முடிவுற்ற திட்டப் பணிகளை முதலமைச்சர் பழனிசாமி திறந்து வைத்தார்.

ரூ.202.47 கோடி மதிப்பீட்டிலான 34 புதிய பணிகளுக்கும் முதலமைச்சர் பழனிசாமி அடிக்கல் நாட்டினார்.

சேலத்தில் பல்வேறு துறைகள் சார்பில் ரூ.64.73 கோடியில் 35 முடிவுற்ற திட்டப் பணிகளை முதலமைச்சர் பழனிசாமி திறந்து வைத்தார்.

ரூ.202.47 கோடி மதிப்பீட்டிலான 34 புதிய பணிகளுக்கும் முதலமைச்சர் பழனிசாமி அடிக்கல் நாட்டினார்.