தலைமைச் செயலகம் முற்றுகை பேரணி: வேல்முருகன், திருமுருகன் காந்தி கைது


தூத்துக்குடியில் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து கோட்டையை முற்றுகையிட தமிழர் வாழ்வுரிமை கூட்டமைப்பினர் சார்பில் பேரணி நடத்தப்பட்டது.

தூத்துக்குடியில் பொதுமக்கள் மீது காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச்சூடு மற்றும் தடியடியில் சிக்கி இதுவரை 13 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் படுகாயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

காவல்துறையினரின் இந்த காட்டுமிராண்டித்தனமான செயலுக்கு பலரும் தங்களது கண்டனத்தையும் எதிர்ப்பையும் பதிவு செய்து வருகின்றனர். மேலும் தங்களது போராட்டத்தையும் முன்னெடுத்து வருகின்றனர்.