பாலியல் வழக்கில் சிக்கியுள்ள குற்றவாளிகளை காப்பாற்ற ஆளுங்கட்சியினரே போராடுகின்றனர் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு

பொள்ளாச்சியில் மாணவிகளை பலாத்காரம் செய்த குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை தேவை என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

இதுகுறித்து அறிக்கை வெளியிட்டுள்ள அவர், பாலியல் வழக்கில் சிக்கியுள்ள குற்றவாளிகளை காப்பாற்ற ஆளுங்கட்சியனரே போராடுவதாக கண்டனம் தெரிவித்துள்ளார்.

மேலும், மக்கள் மன்றத்தில் திமுக போராட்டத்தை மேற்கொள்ளும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.