பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளான மத்திய அமைச்சர் எம்.ஜே. அக்பர் ராஜினாமா ..

பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளான மத்திய அமைச்சர் எம்.ஜே.அக்பர் ராஜினாமா என்று தகவல் வெளியாகியுள்ளது.

மின்னஞ்சல் மூலமாக அரசுக்கு தனது ராஜினாமா கடிதத்தை அக்பர் அனுப்பியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பத்திரிகை ஆசிரியராக பணியாற்றியபோது அக்பர், பெண்களிடம் தவறாக நடந்ததாக புகார் எழுந்தது.

#metoo மூலம் சில பெண்கள் எம்.ஜே.அக்பர் மீது பாலியல் குற்றம் சாட்டியிருந்தார்.

இந்நிலையில் வெளிநாட்டில் இருந்து டெல்லி திரும்பிய அவர் ராஜினாமா செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது.