பாலியல் வன்கொடுமைகள் எத்தனை நடந்தாலும் பரவாயில்லை: அதிமுகவுக்கு ஓட்டு போடுங்க: பிரேமலதா

மக்களவைத் தேர்தல் மற்றும் தமிழக சட்டமன்ற இடைத்தேர்தலுக்காக அதிமுக கூட்டணி தலைவர்கள் தற்போது தீவிரமாக பிரச்சாரம் செய்து வருகிறார்கள். தேமுதிக பொருளாளர் பிரேமலதா தமிழகம் முழுக்க பிரச்சாரம் செய்து வருகிறார்.

அப்போது அவர் பேசியது பின்வருமாறு:-

“நாங்கள் மெகா கூட்டணி அமைத்து இருக்கிறோம். இப்போதுதான் பொங்கலுக்கு அதிமுக சார்பாக ரூபாய் 1000 கொடுக்கப்பட்டது. அதிமுக தொடர்ச்சியாக நிறைய நலத்திட்டங்களை மக்களுக்கு செய்தது.

கடந்த ஐந்து வருடத்தில் பாஜக ஆட்சி மிகவும் நிலையாக இருந்தது. நாடும் பாதுகாப்பாக இருந்தது. பிரதமர் மோடியால் மட்டும்தான் நிலையான ஆட்சியை உருவாக்க முடியும்.

இவர்களை நீங்கள் ஆட்சியில் அமர்த்துவதே நாட்டிற்கு நல்லதாக இருக்கும். பெண்களின், தாய்குலங்களின் வாழ்க்கையை காக்க கூடிய கூட்டணி இந்த அதிமுக கூட்டணி.

நான் சொல்வது என்னவென்றால், பாலியல் வன்கொடுமைகள் எத்தனை நடந்தாலும் பரவாயில்லை.

இந்த கூட்டணிக்கு நீங்கள் வாக்களிக்க வேண்டும். உங்கள் எல்லோரிடமும் கேட்பது இதுதான். இந்த கூட்டணி கண்டிப்பாக உங்களுக்கு உறுதுணையாக இருந்து எல்லா விதத்திலும் உதவும். உங்களின் பாதுகாப்பிற்கு எங்கள் கூட்டணி உறுதியளிக்கும்”

என்று பிரேமலதா பேசி இருக்கிறார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.