ஆட்டு இறைச்சியை நாய் இறைச்சி என பறிமுதல் : கொதித்தெழுந்த இறைச்சித் தொழிலாளர்கள்..

சென்னையில் நேற்று வட மாநிலத்திலிருந்து ரயிலில் வந்த நாய் இறைச்சி பறிமுதல் செய்யப்பட்டது. ஆனால் அது நாய் இறைச்சி அல்ல,நீண்ட வால் கொண்ட ராஜஸ்தான் ஆட்டிறைச்சியென இறைச்சித் தொழிலாளர்கள் கொதித்தெழுந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

வழக்கத்துக்கு மாறாக கிலோவிற்க்கு அதிகமாக மாமூல் தொகை கேட்டு கொடுக்க மறுத்ததால் வால் நீளம் கொன்ட ஆட்டு இறைச்சியை நாய் இறைச்சி என சென்னை எழும்பூர் இரயில்வே அதிகாரிகள் ஆய்வு செய்வதற்கு முன்பே கதை கட்டி விட்டதாக இறைச்சிக்கு சொந்தமான 150..தொழிலாளர்கள் குற்றச்சாட்டினர்.

திருட்டு தனமாக நாய் இறைச்சி கொண்டு வந்தால், சிறு துண்டுகளாக வெட்டாமல் அப்படியே கொன்டு வரும் அவசியம் ஏன் என கேள்வி..? மேலும் அதிகாரிகள் ஆய்வுக்குட்படுத்தி அது நாய் இறைச்சிதான் என்று நிரூபித்தால் எந்த நடவடிக்கையையும் எந்த தன்டனையையும் ஏற்றுகொள்ள தயார் என தொழிலாளர்கள் சவால் விடுத்தள்ளனர்.

அதிகாரிகளே,, என்ன இதெல்லாம்..பணத்திற்காக,, ஏழை தொழிலாளர்களின் வாழ்வாதாரத்திலும் உணவு விஷயத்திலும் இப்புடி விளையாடுவது நியாயமா..??