பாடகர் கோவனுக்கு நிபந்தனை ஜாமீன் ..


திருச்சியில் பிரதமர் மோடியை விமர்சித்துப் பாடல் பாடியதற்காக மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் பாடகர் கோவனைப் போலீஸார் கைது செய்தனர். திருச்சி குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவருக்கு, நிபந்தனை ஜாமீன் வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கோவன் கைதுக்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்திருந்தனர்.