சிவகங்கை மாவட்டத்தில் இன்று முதல் அக்.,31 வரை 144 தடை அமல்..

சிவகங்கை மாவட்டத்தில் இன்ற முதல் அதாவது அக்டோபர். 23 முதல் அக்டோபர் 31 வரை 144 தடையை மாவட்ட நிர்வாகம் அமல் படுத்தியுள்ளது.
வரும் அக்டோபர் 27-ந்தேதி மருதுபாண்டியர் தினமும்,அக்டோபர் 30 -ந்தேதி தேவர் குருபூஜையையும் தொடர்ந்து இந்த தடை அமல்படுத்தியுள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.