சிறுசேமிப்புகளுக்கான வட்டி குறைப்பு நடுத்தர மக்களை பெரிதும் பாதிக்கும் : ப.சிதம்பரம்…


சிறுசேமிப்புகளுக்கான வட்டியை மத்திய அரசு குறைத்துள்ளது நடுத்தர மக்களை பெரிதும் பாதிக்கும் நடவடிக்கை என முன்னாள் மத்திய நிதியமைச்சர் சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து தனது டிவிட்டர் பக்கத்தில் கருத்துத் தெரிவித்துள்ள அவர், பணவீக்கம் அதிகரித்து வரும் நிலையில் மத்திய அரசு மேற்கொண்டுள்ள இந்த நடவடிக்கை நடுக்கர வர்க்கத்தினருக்கு அதிக பாதிப்பை தரும் என்று விமர்சித்துள்ளார்.

8 சதவீத வரி விதிப்பு சேமிப்பு பத்திரங்கள் முதியவர்களுக்கும் ஓய்வூதியதாரர்களுக்கும் ஒரு பாதுகாப்பு அம்சமாக விளங்கி வரும் நிலையில் அதனை ரத்து செய்ய மத்திய அரசு முடிவெடுத்துள்ளது கண்டிக்கத் தக்கது என்றும் சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

யாருடைய நன்மைக்காக இதுபோன்ற நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளோம் என்பதை பாஜக அரசு மக்களிடம் விளக்க வேண்டும் என்றும் சிதம்பரம் கூறியுள்ளார்.