ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் மதுரை பெரியார் பேருந்து நிலையம் நவீனமாகிறது..

மதுரை நகரம், ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் நவீனமயமாக்கப்பட உள்ளது. அதன் ஒருகட்டமாக, பெரியார் பேருந்து நிலையத்தை புதுப்பிக்கும் பணி தொடங்க இருக்கிறது.

புதிய கட்டுமானப் பணிகளுக்காகத் தற்போது மூடப்பட உள்ளதையொட்டி, அங்கிருந்த அனைத்துக் கடைகளையும் உரிமையாளர்கள் அகற்றி வருகின்றனர்.

சிறப்பு மிக்க பெரியார் பேருந்து நிலையத்தை ஹைடெக்காக மாற்றுவது உட்பட பல்வேறு திட்டங்களுக்கான பூமி பூஜையை தொடங்கி வைக்க துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வருகை தந்தார்.

திமுக எம்.எல்.ஏவான பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜனுக்கு முறையான அழைப்பு இல்லை என்று புகார் எழுந்துள்ளது.