சமூக வலைதளங்கள் மூலம் வதந்திகள் பரப்புவதை தடுக்க நடவடிக்கை…

சமூக வலைத்தளங்களை முறைகேடாக பயன்படுத்துவதை தடுக்க நாடாளுமன்ற குழு நடவடிக்கை எடுக்க உள்ளது.

தகவல் தொழில் நுட்பத்திற்கான நாடாளுமன்ற குழுத் தலைவர் அனுராக் தாகூர் இதுகுறித்து வருகிற 11-ஆம் தேதி கூட்டம் ஒன்றுக்கு ஏற்பாடு செய்துள்ளார்.

இந்த கூட்டத்தில் பங்கேற்க வருமாறு மின்னணு தகவல் தொழில் நுட்பத்துறை அதிகாரிகள் மற்றும் டுவிட்டர் நிறுவன அதிகாரிகளுக்கு அவர் அழைப்பு விடுத்துள்ளார்.

சமூக வலைத்தளங்களை முறைகேடாக பயன்படுத்துவோரை தடுக்க இந்த கூட்டத்தில் ஆலோசித்து நடவடிக்கை எடுக்க உள்ளதாக தாகூர் தெரிவித்துள்ளார்.

வதந்திகளை பரப்புவது, தவறான மற்றும் தரக்குறைவான கருத்துகளை பதிவேற்றுவது ஆகியவற்றை தடுக்க இந்த கூட்டத்தின் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.