இலங்கை நாடாளுமன்றத் தேர்தல் : நாளை வாக்கு பதிவு..

இலங்கை நாடாளுமன்றத் தேர்தல் பரப்பரையில் அதி­பர் கோத்­தபய ராஜ­பக்சே­

கொழும்பு: இலங்கை நாடாளுமன்றத் தேர்தலுக்கான வாக்கு பதிவு நாளை நடைபெறவுள்ளது.
உலகை அச்­சு­றுத்­திக் கொண்­டி­ருக்­கும் கரோனா கிரு­மித்தொற்று விவ­கா­ரத்­துக்கு மத்தி­யில் இலங்கை மக்­கள் நாடாளு­மன்­றத் தேர்­தலை எதிர்­கொண்­டுள்­ள­னர்.
ஆகஸ்ட் 5ம் தேதி (நாளை) நடை­பெற உள்ள இத்­தேர்­த­லில் நடப்பு அதி­பர் கோத்­தபய ராஜ­பக்சே­வின் மூத்த சகோ­த­ரர் மகிந்த ராஜ­பக்சே போட்­டி­யி­டு­கி­றார்.

மகிந்த வெற்­றி­பெ­றும் பட்­சத்­தில் இவ்­விரு சகோ­த­ரர்­களும் இலங்­கை­யின் பெரும்­சக்­தி­க­ளாக உரு­வெ­டுப்­பர் என்­றும் அர­சி­ய­ல­மைப்பு சட்­டத்­தில் மாற்­றங்­க­ளைக் கொண்டு­வர இய­லும் என்­றும் அர­சி­யல் பார்­வை­யா­ளர்­கள் கரு­து­கின்­ற­னர்.

21 மில்­லி­யன் இலங்­கைக் குடி­மக்­கள் இத்­தேர்­த­லில் வாக்­க­ளிக்க உள்­ள­னர். முகக்­க­வ­சம் அணிந்து, தங்­க­ளது சொந்த பேனாக்­க­ளைக் கொண்டு வாக்­குச்­சீட்­டில் தங்­க­ளுக்­குப் பிடித்த வேட்­பா­ள­ரைக் குறிப்­பிட உள்­ள­னர்.

ஏற்­கெ­னவே இரு­முறை தேதி அறி­விக்­கப்­பட்டு ஒத்­தி­வைக்­கப்­பட்ட நிலை­யில் இம்­முறை திட்­ட­மிட்­ட­படி இலங்கை நாடா­ளு­மன்­றத் தேர்­தல் நடை­பெற உள்­ளது.

இலங்­கை­யில் மொத்­தம் 2,816 பேர் கொரோனா கிரு­மித்தொற்­றால் பாதிக்­கப்­பட்ட நிலை­யில் இதுவரை 19 இறப்­புச் சம்­ப­வங்­கள் பதி­வாகி உள்­ளன.

26 ஆண்­டு­க­ளாக நீடித்த உள்­நாட்டு மோதல்­களை முடி­வுக்­குக் கொண்­டு­வந்­த­தால் நாடு முன்­னேற்­றப் பாதை­யில் செல்­வ­தாக ராஜ­பக்சே சகோ­த­ரர்­கள் குறிப்­பிட்டு வரு­கின்­ற­னர்.

இந்­நி­லை­யில் எதிர்க்­கட்சி சார்­பாக கள­மி­றங்­கு­கி­றார் சஜித் பிரே­ம­தாசா. இவ­ரது தந்தை ரண­சிங்க பிரே­ம­தாசா கடந்த 1993ஆம் ஆண்டு மனித வெடி­குண்­டால் கொல்­லப்­பட்­டார். இம்­முறை ராஜ­பக்சே சகோ­த­ரர்­க­ளுக்கு மக்­கள் மத்­தி­யில் அதிக செல்­வாக்கு இருப்­ப­தாக அர­சி­யல் கவ­னிப்­பா­ளர் ஜெய­தேவா யங்­கோடா தெரி­வித்­துள்­ளார்.

“இதன் வெளிப்­பா­டா­கவே கோத்­த­பய ராஜ­பக்சே மக்­க­ளால் நாட்­டின் அதி­ப­ரா­கத் தேர்வு செய்­யப்­பட்­டார். எனவே, மகிந்த ராஜ­பக்சே வெற்றி பெறு­வது உறுதி. எவ்­வ­ளவு பெரும்­பான்­மை­யில் வெற்றி பெறு­வார் என்­பது மட்­டுமே தற்­போ­துள்ள கேள்வி,” என்­கி­றார் ஜெய­தேவா.

நாட்­டின் பொரு­ளா­தார வளர்ச்­சிக்­காக தாம் முன்­வைத்த திட்­டங்­க­ளைச் செயல்­ப­டுத்த தமக்­குப் போது­மான அதி­கா­ர­மில்லை என கடந்த வாரம் கூறி­னார் கோத்தபய ராஜ­பக்சே. தேர்­த­லில் அவ­ரது சகோ­த­ரர் மகிந்த ராஜ­பக்சே வெற்றி பெறும் பட்­சத்­தில் கோத்­த­பய எதிர்­பார்க்­கும் அதி­கா­ரம் கிடைக்­கும்.