எஸ்எஸ்சி தேர்வு: சிபிஐ விசாரணைக்கு பரிந்துரை..


மத்திய பணியாளர் தேர்வாணையம் (எஸ்எஸ்சி) சார்பில் கடந்த பிப்ரவரி 17 முதல் 22-ம் தேதி வரை ‘ஜிஜிஎல் டயர் 2’ தேர்வு நடத்தப்பட்டது. 1 லட்சத்து 89,843 பேர் தேர்வு எழுதினர். இந்த தேர்வின் வினாத் தாள் முன்கூட்டியே வெளியானதாக புகார்கள் எழுந்ததால் தேர்வெழுதிய மாணவர்கள் டெல்லி எஸ்எஸ்சி அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

எஸ்எஸ்சி தலைவர் அசிம் குரானா நேற்று வெளியிட்ட அறிக்கையில் “தேர்வெழுதிய மாணவர் பிரதிநிதிகள் வினாத் தாள் வெளியானது குறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண் டும் எனக் கோரி மனு அளித்தனர். அதனை ஏற்று சிபிஐ விசாரணைக்கு பரிந்துரைக்க முடிவு செய்துள்ளோம்” என்று தெரி வித்துள்ளார்.