முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியுடன் மு.க.ஸ்டாலின் சந்திப்பு..

முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை சந்திக்க எதிர்கட்சித் தலைவரும்,திமுக செயல் தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமைசெயலகத்திற்கு வந்துள்ளார்.  தற்போது முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்துப் பேசிவருகிறார்.

போக்குவரத்துத்துறை தொடர்பாக தி.மு.க. நடத்திய ஆய்வு அறிக்கையை திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியிடம் இன்று சமர்ப்பிக்க உள்ளார்.

தமிழகத்தில் அரசு பேருந்துகளின் கட்டணம் கடந்த மாதம் உயர்த்தப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தி.மு.க. உள்பட எதிர்க்கட்சிகள் சார்பில் தொடர்ந்து பல்வேறுகட்ட போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் அரசு போக்குவரத்து கழக நிர்வாகத்தை சீரமைப்பது குறித்து ஆய்வு நடத்தி அறிக்கை தாக்கல் செய்யும்படி, முன்னாள் மத்திய மந்திரி டி.ஆர்.பாலு தலைமையில் எம்.எல்.ஏ.க்கள் பொன்முடி, கே.என்.நேரு, செங்குட்டுவன் மற்றும் தொ.மு.ச. பேரவை பொதுச்செயலாளர் சண்முகம் ஆகியோர் அடங்கிய குழுவை தி.மு.க. அமைத்தது.

அந்த குழுவினர் நடத்திய ஆய்வு அறிக்கை தி.மு.க. செயல் தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலினிடம் நேற்று முன்தினம் சமர்ப்பிக்கப்பட்டது. தி.மு.க.வின் ஆய்வு அறிக்கையை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் நேரில் ஒப்படைக்க மு.க.ஸ்டாலின் முடிவு செய்தார்.