திமுக ஆட்சிக்கு வந்த பின் கீழடியில் அருங்காட்சியகம் அமைக்கப்படும்: ஸ்டாலின் உறுதி

திமுக ஆட்சிக்கு வந்த பின்னர், கீழடியில் அருங்காட்சியகம் அமைக்கப்படும் என மு.க.ஸ்டாலின் பொதுமக்களிடம் உறுதி அளித்துள்ளார்.

தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின், சிவகங்கை மாவட்டம் கீழடியில் ஊராட்சி சபை கூட்டம் முடிவடைந்ததும் அங்கு நான்கு கட்டங்களாக தொல்லியல் ஆய்வு நடைபெற்ற பகுதிகளுக்குச் சென்று நேரில் பார்வையிட்டார். அப்போது மத்திய அரசால் திட்டமிட்டு ஆய்வுப்பணிகள் புறக்கணிக்கப்படுவது குறித்து தி.மு.க தலைவரிடம் பொதுமக்கள் வேதனை தெரிவித்தனர். அப்போது ஐந்தாம் கட்ட பணிக்கு நேற்று அனுமதியளித்துள்ள மத்திய அரசு, தொடர்ந்து விரிவான ஆய்வுகளை மேற்கொள்வதை உறுதிசெய்ய வலியுறுத்தினார். மேலும் தி.மு.க ஆட்சி வந்தவுடன், கீழடியிலேயே அருங்காட்சியகம் அமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார்.