“களைநீக்கி, கழனியில் பயிர்வளர்க்கும் பணியில், கண்ணும் கருத்துமாக ஈடுபடுவீர்!”: தொண்டர்களுக்கு ஸ்டாலின் கடிதம்..

“களைநீக்கி, கழனியில் பயிர்வளர்க்கும் பணியில், கண்ணும் கருத்துமாக ஈடுபடுவீர்!” தொண்டர்களுக்கு ஸ்டாலின் கடிதம்..

– திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில்

என் உயிரினும் மேலான தலைவர் கலைஞரின்அன்பு உடன்பிறப்புகளே!

ஹிட்லர் மற்றும் முசோலினியின் வாரிசுகள்தான் இந்நாட்டை ஆள்கிறார்களோ என்று அனைத்துத்தரப்பு மக்களும் அச்சப்படக் கூடிய அளவிலே,ஜனநாயகத்திற்கும் இந்திய அரசமைப்புச் சட்டத்திற்கும்விரோதமான செயல்பாடுகளை மத்திய-மாநில அரசுகள்தொடர்ந்து மேற்கொண்டு வரும் நிலையில்,பொதுமக்களின் இறுதியானதும் உறுதியானதுமானநம்பிக்கையாக இருப்பது தேர்தல் களம் மட்டும் தான்.

அதுதான் அவர்கள் கையில் உள்ள வாக்குரிமை என்கிறவலிமை மிகுந்த ஆயுதத்தை சரியாகப் பயன்படுத்தக்கூடிய இடமாகும். ஆனால், அந்த ஆயுதத்தையும்தந்திரமாகப் பறித்து, தேர்தல் களத்தைத் தங்களுக்குச்சாதகமாக்கிக் கொள்ள ஆட்சியாளர்கள் பலமோசடிகளையும் சூழ்ச்சிகளையும் செய்து வருகிறார்கள்.

இவை குறித்து தேர்தல் ஆணையத்திற்கு எத்தனையோபுகார்கள் தெரிவிக்கப்பட்டாலும், சட்ட விதிமுறைகளின்படிஅந்த மோசடிகளைக் களைவதில் உரிய வேகமும் போதியஅக்கறையும் காட்டப்படவில்லை.

அதனால், மகேசன்தீர்ப்புக்கு நிகரானதும் மேலானதுமான மக்கள்தீர்ப்பையே மாற்றிவிடக் கூடிய தில்லுமுல்லுகளைஅதிகாரத்தில் இருப்பவர்கள் மேற்கொள்ளநினைக்கிறார்கள்.

இதனைத் தடுத்து நிறுத்திட நமக்குக்கிடைத்துள்ள வாய்ப்பு தான் வாக்காளர் பட்டியல்சரிபார்ப்பு முகாம். அடுத்தவர் கண்ணில் மண்ணைத்தூவிவிட்டு, மோசடி செய்வதற்கு ஆளுந்தரப்பு அனைத்துவழிகளையும் மேற்கொள்ளும் நிலையில்,

கழகத்தினர்விழிப்புடன் இருந்து, கண்ணில் விளக்கெண்ணெய்ஊற்றிக் கொண்டு ஊன்றிக் கவனிப்பது போல, இந்தமுகாம்களில் செயல்பட வேண்டும் என்பதைத் தொடர்ந்துவலியுறுத்தி வருகிறேன்.

கடந்த செப்டம்பர் 8ந் தேதி நடைபெற்றகழகத்தின் மாவட்டச் செயலாளர்கள், சட்டமன்ற-நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில்நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில், வாக்காளர் பட்டியல்சரிபார்ப்புப் பணிகளில்,

ஆளுங்கட்சியினர், போலிவாக்காளர்களைப் புகுத்தவும், பாரம்பரியமான கழகவாக்காளர்களை நீக்கவும் முயற்சி செய்வதாக பலஇடங்களிலிருந்தும் தகவல்கள் வருகின்றன. அவ்வாறுநடைபெறும் அத்துமீறல்களை –

சட்டவிரோதசெயல்களைப் பற்றி, உடனுக்குடன் சம்பந்தப்பட்ட தேர்தல்அதிகாரிகளிடம் புகார்களைக் கொடுத்து உரியநிவாரணம் பெற்றிட வேண்டும் எனவும், அப்படி புகார்கொடுத்த விவரங்களைக் கழகத் தேர்தல்பணிக்குழுவிற்கும்,

தலைமைக் கழகத்திற்கும்அவ்வப்போது மாவட்டக் கழகச் செயலாளர்கள் அனுப்பிவைத்திட வேண்டும்”” என வலியுறுத்தப்பட்டது. இதனைகழக நிர்வாகிகள் சரியாகவும் முறையாகவும்கடைப்பிடித்திட வேண்டும் என மீண்டும்வலியுறுத்துகிறேன்.

நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பான (ஏன்,சட்டமன்றத் தேர்தலுக்கும் என்று கூட சொல்லலாம்)வாக்காளர் பட்டியல் சரிபார்ப்புக்கான கடைசி முகாம் 14-10-2018 அன்று நடைபெறுகிறது.

கடந்த 7-10-2018ஞாயிறன்று நடைபெற்ற முகாமின் போது, கொளத்தூர்தொகுதியில் நேரில் சென்று பல வாக்குச்சாவடிகளைப்பார்வையிட்டேன். கழகத்தின் சார்பிலான முகவர்களும்,தோழமைக் கட்சிகளைச் சார்ந்த முகவர்களும்அக்கறையுடன் பணியாற்றியதுடன், என்னைக் கண்டதும்ஆர்வத்துடன் வந்து அன்பினை வெளிப்படுத்தினர்.

கழகத்தின் தலைவர் என்ற பொறுப்பைச் சுமக்கும்உங்களில் ஒருவனான என்னுடைய கொளத்தூர்தொகுதியில் வெளிப்படும் அக்கறை, ஒவ்வொருதொகுதியும் நம்முடைய தொகுதி என்கிற எண்ணத்துடன்,தமிழ்நாட்டில் உள்ள 234 தொகுதிகளிலும் அதில் உள்ளஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் வெளிப்பட வேண்டும்.

கடைசி முகாம் நடைபெறும் அக்டோபர் 14ஆம் நாள் அன்றுகழகத்தினர் மிகுந்த விழிப்போடு இருந்து அந்தப்பணியினை மேற்கொள்ள வேண்டும்.

இதுகுறித்து தலைமைக் கழகம் ஏற்கனவேவிடுத்துள்ள அறிவிப்பில், “மாவட்ட, மாநகர, ஒன்றிய, நகர,பகுதி, நகரிய, பேரூர், ஊராட்சி, வார்டு கழக செயலாளர்,நிர்வாகிகள் மற்றும் வாக்குச் சாவடி நிலைய முகவர்கள்(BLA-2) ஆகியோர் தங்களை முழுமையாக ஈடுபடுத்திக்கொள்ள வேண்டும்” என வலியுறுத்தப்பட்டுள்ளது.

இதனை அலட்சியப்படுத்திடாமல் அவசியமாகச்செயல்படுத்த வேண்டிய கடமை கழகத்தினருக்குஇருக்கிறது. நாம் காட்டுகின்ற அக்கறையை தேர்தல்பணியில் உள்ள அலுவலர்களும் காட்டிட வேண்டும்.அப்போது தான், வாக்காளர் பட்டியல் திருத்தம் செய்கின்றபணி முழுமையாக நிறைவேறிடும்.

அதுநிறைவேறிடக்கூடாது என்பதில் ஆட்சியாளர்கள்அக்கறை செலுத்தி, போலி வாக்காளர்களைச் சேர்ப்பதில்தீவிரமாக இருக்கிறார்கள்.

கடந்த வாரம் நடைபெற்ற முகாமின் போது,கொளத்தூர் தொகுதியில் உள்ள எவர் க்ரீன் பள்ளியின்16 வாக்குச்சாவடிகளுக்கும் க்ஷடுடீ என்கிறவாக்குச்சாவடி அலுவலர்கள் கட்டாயம் வந்திருக்கவேண்டும்.

நான் அங்கு பார்வையிடச் சென்ற போது அந்தஅலுவலர்கள் வரவில்லை. அதன் காரணமாக,ஆளுங்கட்சியினர் தாங்கள் திட்டமிட்டு நிறைவேற்றநினைக்கிற தில்லுமுல்லுகளை மேற்கொள்கிறார்கள்.

கொளத்தூரில் மட்டுமின்றி, தமிழ்நாடுமுழுவதுமிருந்தும் கழகத்தினர்-தோழமைக் கட்சியினர்-பொதுமக்களிடமிருந்து வரக்கூடிய தகவலின்படி,தி.மு.கழகத்திற்கு ஆதரவான வாக்காளர்களைநீக்குகின்ற வேலையை ஆளுங்கட்சியினர் ஒருசிலஅதிகாரிகளின் துணையுடன் மேற்கொள்கிறார்கள்.

அதுபோலவே முஸ்லிம்கள் உள்ளிட்ட சிறுபான்மையினவாக்காளர்களும் நீக்கப்படுகின்றனர். புதிதாகக்குடிவந்தவர்களின் பெயர்களை சேர்ப்பதிலும் அலட்சியம்காட்டப்படுகிறது. இதுகுறித்து அளிக்கப்படும் புகார்களின்மீது தேர்தல் அலுவலர்கள் உரிய நடவடிக்கைஎடுப்பதில்லை;

ஏனோ தயக்கம் காட்டுகிறார்கள்.இருப்பவர்களை நீக்குகின்ற அதே நேரத்தில், இறந்துபோனவர்களின் பட்டியலை ஆதாரத்துடன் எடுத்துக்காட்டி,அவர்களை நீக்குமாறு கழகத்தினரும் மற்ற கட்சியினரும்எடுத்துச் சொன்னால் அந்த வாக்காளர்களைநீக்கிவிடாதவாறு ஆளுங்கட்சியினர் செயல்படுகிறார்கள்.

வடமாநிலங்களிலிருந்து தமிழ்நாட்டிற்கு வந்துள்ளதொழிலாளர்களுக்கு உரிய முகவரியில்லாத போதும்அவர்களின் பெயர்களை ஒன்றுக்கும் மேற்பட்டவாக்குச்சாவடிகளில் சேர்த்து, வாக்காளர் அடையாளஅட்டைகளையும் பெற்றுத் தரும் வேலையை ஆளுந்தரப்புமேற்கொள்கிறது.

இறந்தவர்கள்-இடம் பெயர்ந்தவர்கள்உள்ளிட்டோரின் பெயர்கள் நீக்கப்படுவதில் அலட்சியமும்,கழகத்தினர்-சிறுபான்மையினர்-தோழமைக் கட்சியினர்ஆகியோர் சார்ந்த வாக்காளர்கள் பெயர்களை நீக்குவதில்அதிதீவிர அக்கறையும் காட்டி ஆளுங்கட்சியினர்செயல்பட்டு வருகின்றனர்.

இவற்றையெல்லாம்கவனத்தில் கொண்டு, 14ந் தேதி நடைபெறும் சிறப்புமுகாமில் கழகத்தின் முகவர்கள் விழிப்புடன்செயல்பட்டால் தான், வாக்காளர் பட்டியல் மோசடியைத்தடுத்திட முடியும்.

புதிய இளம் வாக்காளர்களை சேர்ப்பதுஎன்பதும் மிகவும் முக்கியமான பணியாகும். 2019ஆம்ஆண்டு ஜனவரி 1ந் தேதியுடன் 18 வயதுநிறைந்தவர்களின் பெயர்களும் வாக்காளர் பட்டியலில்சேர்க்கலாம் என்பதால், அத்தகைய இளைஞர்கள் உரியசான்றுகளுடன் வாக்காளர் பட்டியலில் தங்கள்பெயர்களைப் பதிவு செய்திட கழக முகவர்கள் துணைநிற்க வேண்டும்.

நம் உயிரினும் மேலான தலைவர்கலைஞர் அவர்களின் சமூகநீதித் திட்டங்களால் பயன்பெற்று வாழ்க்கையில் உயர்வடைந்துள்ள இளையசமுதாயம் அந்த நன்றியினை நெஞ்சில்தேக்கியிருப்பதை தலைவர் அவர்கள் மறைந்த போதுகாண முடிந்தது.

அவர்கள் முதன்முதலாகப் பதிவு செய்யும்வாக்குகள் உதயசூரியனுக்குப் பதிவாகி, தமிழ்நாட்டில்புதிய விடியல் ஏற்படும் வகையில் கழகத்தினர்செயலாற்ற வேண்டும்.

வாக்காளர் பட்டியல் திருத்தம் என்பது,வாக்குச்சாவடி முகவர்களுக்கு மட்டுமான பணிதானேஎன்று நினைத்துவிடாமல் கழகத்தின் மாவட்ட-ஒன்றிய-நகர-பேரூர்-ஊராட்சி கிளைக் கழக நிர்வாகிகள்அனைவரும் கவனம் செலுத்திட வேண்டும். கழகசட்டமன்ற உறுப்பினர்கள் தங்கள் தொகுதியில்முழுமையான அக்கறை காட்டிட வேண்டும்.

அக்டோபர் 14 காலை முதல் மாலை வரைஇந்தப் பணியில் சிறிதும் சோர்வின்றிச் செயல்பட்டால்தான் ஆளுந்தரப்பு மேற்கொள்ளும் மோசடிகளைத்தடுத்திட முடியும்.

வாக்காளர் பட்டியலில் உள்ளகளைகளை நீக்கினாலே, வெற்றி எனும் பயிர் விரைந்துவிளையும். சமுதாய சீர்திருத்தமும் தேர்தல் களஅரசியலும் கழகத்தின் இரு கண்கள்.

நம் உயிரினும்மேலான தலைவர் கலைஞர் அவர்கள் இவற்றை நமக்குப்பல முறை வலியுறுத்தியிருக்கிறார்.

அறுவடைக்குப் பின்

வீட்டுக்கு வந்த நெல்லை

அரிசியாக்கி உலையிலிட்டு

சோறு படைத்தல்

அரசியல் என்றால்

அந்நெல் விளையும் வயலுக்கு

நீர் பாய்ச்சி உரமிட்டு,

அருகில் வளர் களைகளையும்

அகற்றுவதே சமுதாயப் பணிஎன்பேன்

– இதுதலைவர்கலைஞரின்வாக்கு.

தேர்தல் அரசியல் களத்தில் உலை பொங்கி,அனைவருக்கு உணவு பரிமாறப் பட வேண்டுமென்றால்,அதற்கு முன்பாக, நெல் விளையும் வயல் போன்றவாக்காளர் பட்டியலில் போலி வாக்காளர்கள் எனும்களைகளை நீக்கி,

புதிய வாக்காளர்கள் எனும் உரமிட்டு,பயிர் வளர்ப்பதுதான் நாம் தற்போது மேற்கொள்ளவேண்டிய சமுதாயப் பணி. அதனைச் சரிவரச்செய்தால்தான், விளைச்சல் வீண்போய்விடாமல்வெற்றியினை அறுவடை செய்திட முடியும்.

அரசியல்களத்தில் பெறுகின்ற வெற்றியை தமிழ்ச் சமுதாயத்தின்நலனுக்கும் உயர்வுக்கும் பயன்படுத்துவதே தலைவர்கலைஞர் அவர்கள் நமக்குக் காட்டியுள்ள பாதை.

வாக்காளர் பட்டியலில் உள்ள ஒவ்வொருவாக்கும் நெல்மணிகள். ஒரு நெல் வீணானாலும்,தேவையற்ற பதர்கள் பெருகினாலும் அதுவெற்றியினைப் பாதிக்கும்.

இளையான்குடி தொகுதியில்கழக வேட்பாளர் மலைக்கண்ணன் ஒரேயொரு வாக்கில்வெற்றி வாய்ப்பை இழந்ததனை தலைவர் கலைஞர்அவர்கள் பல முறை சுட்டிக்காட்டி நமக்கு விழிப்புணர்வுஏற்படுத்தியிருக்கிறார்.

அந்த விழிப்புணர்வுடன்வாக்காளர் பட்டியல் திருத்தம் செய்யும் முகாமில் கவனம்செலுத்திட வேண்டும்.

இன்று நீங்கள் காட்டும் அக்கறை, நாளைநம்மை வெற்றிக் கரை சேர்க்கும். விழிப்புடன் செயல்பட்டு,வெற்றியினை உறுதி செய்வீர்!