மறைந்த தமிழறிஞர் க.ப.அறவாணனுக்கு மு.க.ஸ்டாலின், கனிமொழி அஞ்சலி

புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகத்தில் தமிழ்த்துறை பேராசிரியர், சென்னை மற்றும் நெல்லை பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தருமான க.ப.அறவாணன்(77) இன்று காலமானார்.

இவர் 1941ஆம் ஆண்டு ஆகஸ்ட் 9ல் நெல்லை மாவட்டம் கடலங்குடியில் பிறந்தவர். சமூகவியல், மொழியியல், இலக்கணம், கல்வியியல், வரலாறு, திறனாய்வு உள்ளிட்ட துறைகளில் ஏராளமான புத்தகங்களை வெளியிட்டுள்ளார்.

மூன்று முறை சிறந்த நூல்களுக்கான தமிழக அரசின் விருதை வென்றுள்ளார். 1986ல் சிறந்த பேராசிரியருக்கான விருதை வாங்கினார். கடந்த சில நாட்களாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு வந்தார்.

இந்த சூழலில் இன்று அதிகாலை சென்னை அமைந்தகரையில் உள்ள அவரது வீட்டில் காலமானார். க.ப.அறவாணன் மறைவிற்கு பல்வேறு தரப்பினரும் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.