மாநில அளவிலான கோகோ போட்டி: காளையார்கோவில் பள்ளி சாம்பியன்..


ஈரோட்டில் பள்ளிக்கல்வித்துறை சார்பில் 2017-18- ஆம் ஆண்டிக்கான 60-வது சுதந்திரதினவிழாவை முன்னிட்டு மாநில அளவிலான குழு விளையாட்டுப்போட்டிகள் நடைபெற்றது. இந்த போட்டியில் பெண்களுக்கான கோகோ பிரிவில் சிவகங்கை மாவட்டம் காளையார் கோவில் “கோலி ஸ்பிரிட் மேல்நிலைப்பள்ளி” சாம்பியன் பட்டம் வென்றது. இதே பிரிவில் சிவகங்கை -யில்  பள்ளிக்கல்வித்துறை சார்பில் 2016-17-ஆம் ஆண்டிக்கான 59-வது சுதந்திரதின குழு போட்டியில் சாம்பியன் பட்டம் வென்றது குறிப்பிடத்தக்கது. பட்டம் வென்ற மாணவிகளுக்கு பள்ளி தாளாளர்,முதல்வர் உள்ளிட்ட ஆசிரியர்  பெருமக்கள் வாழ்த்து தெரிவித்தனர்.