சிலை கடத்தல் வழக்குகளை விசாரிக்க சிபிஐ மறுத்து கடிதம் : உயர்நீதிமன்றம் தகவல் ..

தமிழகத்தில் சிலை கடத்தல் வழக்குகளை ஐஜி பொன் மாணிக்கவேல் தலைமையில் நீதிமன்ற மேற்பார்வையில் நடைபெற்று வந்தது.

இந்நிலையில் தமிழக அரசு சிலை கடத்தல் வழக்குகளை சிபிஐ விசாரிக்க கோரியிருந்தது.

சிபிஐ விசாரணைக்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கில் சிபிஐக்கு விளக்கம் கேட்டு சம்மன் அனுப்பியது உயர்நீதிமன்றம்.

இதற்கு பதிலளித்த சிபிஐ சிலை கடத்தல் வழக்கை விசாரிக்க மறுத்து தமிழக அரசுக்கு கடிதம் எழுதியருப்பதாக சிபிஐ உயர்நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்திருப்பதாக நீதிபதிகள் தெரிவித்தனர்.