சிலை கடத்தல் விவகாரத்தில் தமிழக அரசு மெத்தனம் : உயர்நீதிமன்றம் கண்டனம்.


சிலை கடத்தல் விவகாரத்தில் தமிழக அரசு மெத்தனமாக செயல்படுவதாக சென்னை உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.

சிலைகளுக்கான பாதுகாப்பு அறை அமைக்க 2021ம் ஆண்டு வரை கால அவகாசம் கோரியதற்கும் உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.

சிலைகளுக்கான பாதுகாப்பு அறை விவகாரத்தில் மெத்தனம் தொடர்நதால் தலைமைச் செயலாளரை நேரில் ஆஜராக உத்தரவிட நேரிடும் என உயர்நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது.