சிலைக்கடத்தல் வழக்குகளை சிபிஐக்கு மாற்ற கொள்கை முடிவு : தமிழக அரசு உயர்நீதிமன்றத்தில் தகவல்


ஐஜி பொன். மாணிக்கவேல் விசாரணையில் திருப்தியில்லாத காரணத்தினால், சிலை கடத்தல் வழக்குகளை சிபிஐக்கு மாற்ற கொள்கை முடிவெடுத்துள்ளதாக தமிழக அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் சிலை கடத்தல் தொடர்பான வழக்குகளை, சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் மகாதேவன், ஆதிகேசவலு அமர்வு விசாரணை நடத்தி வருகிறது.

நீதிமன்ற உத்தரவுப்படி சிலைக் கடத்தல் தொடர்பான வழக்குகளை ஐஜி பொன்.மாணிக்கவேல் விசாரணை நடத்தி வருகிறார்.

இந்நிலையில், சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தாக்கல் செய்த பதில் மனு ஒன்றில், சிலை கடத்தல் தொடர்பான அறிக்கைகளை ஒராண்டாக பொன்.மாணிக்கவேல் தமிழக அரசிடம் தெரிவிப்பது இல்லை.

அவர் விசாரிப்பதில் திருப்தியில்லை. சிலை கடத்தல் வழக்குகளை சிபிஐக்கு மாற்றுவது என அரசு கொள்கை முடிவு எடுத்துள்ளது என தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதனைதொடர்ந்து நீதிபதிகள், போலீசார் மீது மாநில அரசுக்கு திருப்தியில்லை என கேள்வி எழுப்பியதுடன், கொள்கை முடிவு தொடர்பான ஆவணங்களை தாக்கல் செய்ய உத்தரவிட்டு, விசாரணையை ஆக.,8 க்கு ஒத்திவைத்தனர்.