ஸ்டெர்லைட்டுக்கு எதிராக போராடி வரும் மக்களுடன் மாவட்ட நிர்வாகம் பேச்சுவார்த்தை : அமைச்சர் கடம்பூர் ராஜீ..


ஸ்டெர்லைட்டுக்கு எதிராக போராடி வரும் மக்களுடன் மாவட்ட நிர்வாகம் பேச்சுவார்த்தை நடத்தும் என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார். மக்களிடம் கருத்து கேட்டு, அதன் அடிப்படையில் முதலமைச்சரிடம் அறிக்கை சமர்ப்பிக்கப்படும் என்று கூறிய அவர், தூத்துக்குடியில் புற்றுநோய்கான பிரத்யேக சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகிறது என்று கூறினார்.