ஸ்டெர்லைட் வழக்கு :உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு..

கடந்த 18-ஆம் தேதி சென்னை உயர்நீதிமன்றம் ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம் தொடர்ந்த வழக்கில் தீர்ப்பு வழங்கியது. அதில் துாத்துக்குடியில் அமைந்துள்ள ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட உத்தரவிட்டது.

இதனை எதிர்த்து ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது. அதில் சென்னை உயர்நீதிமன்றம் வழக்கை முழுமையாக விசாரிக்காமல் தீர்ப்பு வழங்கியுள்ளதாக தெரிவித்துள்ளது.
இந்த வழக்கை அவசர வழக்காக விசாரித்து ஸ்டெர்லைட் அலையை திறக்க அனுமதியளிக்க வேண்டும் என மேல் முறையிடு செய்துள்ளது.