ஸ்டெர்லைட் வழக்கு :உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு கேவியட் மனு தாக்கல்…

தூத்துக்குடி ஸ்டெர்லைட் விவகாரம் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூ​ட சென்னை உயர்நீதிமன்றம் நேற்று தீ​ர்ப்பு அளித்துள்ளது.
இந்த தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் ஸ்டெர்லைட் ஆலை ​நிர்வாகம் சார்பில் மேல்முறையீடு செய்ய உள்ளதாக கூறப்படுகிறது. முன்னதாக, மக்கள் அதிகாரம் அமைப்பு சார்பில் உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டது.

அதில் ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம் மேல்முறையீடு செய்தால் தங்கள் தரப்பு வாதத்தையும் கேட்க வேண்டும் என கேட்டுக்கொண்டனர்.

இந்த நிலையில் தமிழக அரசு சார்பிலும் உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டது.

ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம் மேல்முறையீடு செய்தால் தங்கள் தரப்பு கருத்தையும் கேட்க வேண்டும் என தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.