ஸ்டெர்லைட் ஆலை ஆய்வை ஒத்திவைக்க தமிழக அரசு வலியுறுத்தல்..

துாத்துக்குடியில் மூடப்பட்டுள்ள ஸ்டெர்லைட் ஆலையை தருண் அகர்வால் குழு ஆய்வு செய்வதை ஒத்திவைக்க வேண்டும் என்று மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியத்திற்கு கடிதம் மூலம் தமிழக அரசு வலியுறுத்தியுள்ளது.

வரும் 22ம் தேதி முதல் ஸ்டெர்லைட் ஆலையை தருண் அகர்வால் குழு ஆய்வு செய்யும் என தேசிய பசுமை தீர்ப்பாயம் தெரிவித்திருந்தது.

இந்நிலையில், தருண் அகர்வால் குழுவிற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள தமிழக அரசு, மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியத்திற்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளது.

அதில் ஸ்டெர்லைட் ஆலையை ஆய்வு செய்ய தருண் அகர்வால் குழுவிற்கு எதிரான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதாக சுட்டிகாட்டியுள்ளது.

வழக்கு நிலுவையில் உள்ளதால் தருண் அகர்வால் குழு ஆய்வு செய்வதை ஒத்தி வைக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.